Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் சாதனை

பிப்ரவரி 18, 2023 11:42

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில்
இராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி மாணவர்கள் சாதனை


ராசிபுரம் : தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை கண்டறியும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடும், ஆண்டு தோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற விளையாட்டுப்
போட்டிகளில் இராசிபுரம் - வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல்
கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஹாக்கி, கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து,
டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் தடகளம் உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டு
ரூ. 2 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வென்று சாதனை
படைத்துள்ளனர்.


போட்டிகளில் வென்று சாதனை படைத்த கல்லூரி மாணவ, மாணவியர்களை கல்லூரியின் தாளாளர் கே.பி.இராமசுவாமி, செயலாளர் முத்துவேல் இராமசுவாமி,
கல்லூரியின் இயக்குநர் கல்வி முனைவர் இரா.செல்வகுமரன், முதல்வர் முனைவர்.
எஸ்.பி.விஜய்குமார், துணைமுதல்வர் முனைவர். ஆ.ஸ்டெல்லா பேபி, நிர்வாக புலமுதன்மையர் முனைவர். எம்.என்.பெரியசாமி, உடற்கல்வி இயக்குநர் முனைவர். தே.ரமேஷ், பயிற்சியாளர்கள் எஸ்.கண்ணன், என்.தவமணி, ஆர்.பிரியங்கா
ஆகியோர் பாராட்டினர்.

தலைப்புச்செய்திகள்